Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பூந்தமல்லி: புதுப்பேட்டை, தெற்கு கூவம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் தங்கும் ஓய்வறையில் படுக்க சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்த போது, வாயில் நுரை தள்ளியபடி கோபி மர்மமாக முறையில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோபி உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கோபி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு வழங்கப்பட்ட பயணிகள் பஸ் டிக்கெட்டுகளை தொலைத்துவிட்டதும், இது தொடர்பாக கோயம்பேடு போலீசில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது
எனவே கோபி குடிபோதையில் நாக்கு வறண்டு இறந்தாரா? அல்லது வலிப்பு நோய் காரணமாக இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.